ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டினால், ‘அதிக மக்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி’ என்கிற பெயரில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடிக்கலாம்.

இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். ஆனால் 2022-ம் ஆண்டு முதன்முதலாக டெல்லிக்கு வெளியே சண்டிகரில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன்முதலாக தென்னிந்தியாவில் அதுவும் சென்னையில் நடக்க உள்ளது. இதுவரை நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கும், இந்த ஆண்டு சென்னையில் நடக்கும் சாகச நிகழ்ச்சிக்கும் சற்று வித்தியாசம் உள்ளது.
அதாவது, இதுவரை நடந்த சாகச நிகழ்ச்சிகளில் விமானங்கள் ஒரு திசையில் தான் பயணிக்கும். ஆனால் நாளை நடக்கப்போகும் நிகழ்ச்சியில் வலது, இடது மற்றும் முன் திசைகளின் விமானங்கள் சீறி பாய உள்ளது.
ஜாலியா பார்த்து மகிழ வாங்க மக்களே!