FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இந்தப் போட்டியில் 57-81 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களையும் சேர்த்து மொத்தம் 80 அணிகள் தகுதிச்சுற்றில் ஆடுகின்றன. இதில் இந்திய அணி ஆசிய கண்டத்தில் குரூப் D யில் லெபனான், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய அணிகளோடு இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சவுதி அரேபியாவில் இரு அணிகளும் மோதியிருந்தன.