அதனைத் தொடர்ந்து நேற்று (16.08.2022) இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம். மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகிறோம். 17 வயது பெண்ணின் மீது தண்ணீரைத் தெளித்து கேலி செய்ததாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றனர்.