சிறுநீரகக் கட்டி: காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில் GGHC சாதனை! | GGHC becomes the first hospital in the country to use real-time contrast-enhanced ultrasound guidance

Share

சென்னையில் உள்ள முன்னணி நான்காம் நிலை பல்நோக்கு மருத்துவமனையாகிய, கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியானது (GGHC), நாட்டிலேயே முதலாவதாக, காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட்- வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனையாக மாறியுள்ளது.

சிறுநீரகக் கட்டிகளால் அவதிப்பட்ட 76 வயதான திரு. ஆதேஷ்*, கட்டிகளை அகற்ற இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அந்த சிகிச்சைகளில் அவருக்கு ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பாதி எடுக்கப்பட்டது, இதனால் இருந்த பாதி சிறுநீரகங்கள் குறைந்த அளவில் செயல்பட்டன. கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் ஒரு வழக்கமான பரிசோதனையின் போது, அவரது இடது சிறுநீரகத்தில் மீண்டும் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோயியல் பேராசிரியர் டாக்டர் எஸ் ராஜசுந்தரம், மற்றும் சிறுநீரகவியல் மூத்த ஆலோசகர் டாக்டர் முத்துக்குமார் ஆகியோரின் ஆலோசனையைத் தொடர்ந்து மைக்ரோவேவ் அபிலேஷனுக்கு அவர் கதிரியக்க மருத்துவ நிபுணர் டாக்டர் மோஹ்னிஷுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆரம்ப மதிப்பீடுகளுக்குப் பிறகு, டாக்டர் மோஹ்னிஷ் மற்றும் அவரது குழுவினர் காண்ட்ராஸ்ட் மேம்பாட்டு அல்ட்ராசவுண்ட் வழிநடத்திய சிறுநீரகக் கட்டி சிகிச்சையைத் தேர்வு செய்தனர்.

சிறுநீரக பாதிப்புகள்!

சிறுநீரக பாதிப்புகள்!

நோயாளி 76 வயதுடையவர் மேலும் அவருக்கு பல இணை நோய்கள் இருந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலை இருந்தது. தோலின் வழியே கட்டிக்குள் ஒரு சிறிய ஊசியைச் செருகுவதன் மூலம் கட்டியை உள்ளே இருந்து எரிக்கும் மைக்ரோவேவ் அபிலேஷன் என்ற ஒரு குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட சிகிச்சையை மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

அவர் சிறுநீரக செயலிழப்பு நோயாளியாக இருந்ததால், சிகிச்சையானது சி.டி வழிநடத்தும் சிகிச்சையிலிருந்து அல்ட்ராசவுண்ட்-வழிநடத்தும் சிகிச்சைக்கு மாற்றப்பட்டது. மேலும், மருத்துவர்கள் சாதாரண சிறுநீரக திசுக்களில் இருந்து கட்டியின் திசுக்களை அடையாளம் காண நவீன முறைகளைப் பயன்படுத்தினர், பின்னர் மைக்ரோவேவ் அபிலேஷன் மூலம் கட்டி திசுக்களை எரித்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com