தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளோ, “அரூரை கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் ஒதுக்க வேண்டாம், திமுகவே போட்டியிட வேண்டும், மூன்று முறை வெற்றிபெற்றுள்ள அதிமுக-வை வெல்ல வேண்டுமென்றால் திமுக அங்கு போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். காரணம், 2019 இடைத்தேர்தலில் அதிமுக 88,632 வாக்குகளும், திமுக 79,238 வக்குகளும் பெற்றது. அதேநேரம் 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் 68, 699 வாக்குகள்தான் பெற்றது. அதிமுகவோ 99,061 வாக்குகள் பெற்றது, அதுமட்டுமன்றி அமமுக தனியாக நின்று14,327 வாக்குகள் பெற்றது, இவ்வளவு எதிர் வாக்குகள் உள்ள நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் அமமுக-வும் சேர்ந்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும். இப்படியான சூழலில் மீண்டும் சிபிஎம்மோ, புதிதாக விசிக-வோ போட்டியிட்டால் சரியாக வராது, திமுக-வே நேரடியாக களம் கண்டால்தான் அதிமுக-வுக்கு டஃப் கொடுக்க முடியும், இதை தொகுதி பொறுப்பாளர்கள் மூலம் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம்” என்கின்றனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களை தாஜா செய்து வாக்குகள் பெறும் பணியைவிட கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்து தொகுதிகளை ஒதுக்கும் பணிதான் திமுக-வுக்கு பெரும் பணியாக இருக்கும்.