சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு

Share

ஆளுநர் ஆர்.என்.ரவி/சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீதான குழந்தைத் திருமண குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தமிழக அரசைப் பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்த குற்றச்சாட்டும் ஒன்று.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டு என்ன?

அந்தப் பேட்டியில், “சமூக நலத்துறையின் அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கை எடுத்ததார்கள். அங்கே தீட்சிதர்கள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் கூறினார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com