இது குறித்துத் தெரிவித்த உள்ளூர் மக்கள், ” ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிருக்கின்றார்கள். குரங்குகள் அவற்றை எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றன. இதனால், ஆபத்தான நோய்கள் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.

தங்கள் நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டது குறித்து தெரிவித்த பாஸ்டியர் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், “நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த ஆய்வு நிறுவனத்தின் மருத்துவக் கழிவுகளை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறோம். பிரத்யேக வாகனத்தில் பாதுகாப்பாக கோவை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து வருகிறோம். இந்த சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காலாவதியான பொருட்கள்தான். ஆபத்தான கழிவுகள் அல்ல. மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.