சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

Share

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக

பள்ளக்கால் அரசு மேல்நிலை பள்ளி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் மேஜர் அல்ல என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரத்தில் இன்று திங்கள்கிழமை பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எல்லோருக்கும் சமத்துவமான அரசாக தங்கள் அரசாங்கம் செயல்படும் என்றும், மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த பின்னணி

பள்ளக்கால் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பள்ளாக்கால் புதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால், புதுக்குடி உள்ளிட்டப் பகுதிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com