சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? – கோவை பள்ளியில் நடந்தது என்ன?

Share

கோவை, பள்ளிக்குழந்தை, பள்ளியை விட்டு நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

தங்கள் மகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் நாங்களே மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொள்கிறோம் என்று கோவையிலுள்ள தனியார் பெண்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு குழந்தையின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, 100 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் வகுப்பு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதலின்றி இப்படி எழுதி வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்று பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில், வேறு எந்தப் பெற்றோரிடமும் இதுபோன்று எழுதி வாங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள தடாகம் சாலையில் அமைந்துள்ளது அவிலா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையான கார்மேல் சபை சகோதரிகளால் இந்த பள்ளி (Convent), நடத்தப்பட்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com