சரத்பாபு: குஷ்பு, சத்யராஜ் உருக்கமாக பகிர்ந்து கொண்ட நினைவலைகள் – “கடைசிவரை பார்க்க முடியாமல் போனதே”

Share

சதய்ராஜ் குஷ்பு
படக்குறிப்பு,

குஷ்பூ, சத்யராஜ்

தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகரான சரத் பாபு, நேற்று மதியம் 1.32 மணிக்கு காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினி காந்த், சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத் குமார் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், பொதுமக்களும் சென்னையில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த நடிகர் சரத் பாபு 1973ஆம் ஆண்டில் ராமராஜ்ஜியம் எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். இயக்குநர் பாலச்சந்தர் நடிகர் சரத் பாபுவை பட்டினப் பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும், சலங்கை ஒலி, அண்ணாமலை, முத்து உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

திரையுலகினர் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வரும் வேளையில், நடிகை குஷ்பூ சரத் பாபுவின் மறைவினைப் பற்றியும், அவரது நினைவலைகளையும் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com