உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, துரியன் என்கிற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.