கோவை அருகே வன விலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது ஏன்?

Share

கோவையில் அமைக்கப்பட்டுள்ள வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம் பயனளிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் யானை உள்ளிட்ட காட்டுயிர்களை இடமாற்றம் செய்யவும், காயப்படும் காட்டுயிர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 130 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைத்துள்ளது.

யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட எந்த வகையான காட்டுயிர் மற்றும் பறவைகளையும் இங்கே கொண்டு வந்து சிகிச்சை அளித்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான வசதிகள் இருப்பதாக வனத்துறையினர் உறுதியளிக்கின்றனர்.

கட்டமைப்பை மட்டும் ஏற்படுத்தாமல் இதற்குத் தேவையான வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன ஊழியர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டுமென்று காட்டுயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வனவிலங்குகளுக்கு அதிநவீன முறையில் சிகிச்சையளித்து அவற்றின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு காட்டுயிர் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு, இங்குள்ள வன கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

வனவிலங்கு சிகிச்சை மையம் ஏன்?

சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கூடலுாரிலிருந்தும், கோவை மாவட்டம் தொண்டாமுத்துாரிலிருந்தும் வனத்துறையால் பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் (ராதாகிருஷ்ணன், ரோலக்ஸ் என்று மக்களால் பெயரிடப்பட்ட யானைகள்) சில நாட்களில் உயிரிழந்தன. அப்போது வனத்துறை மீதும், வன கால்நடை மருத்துவர்கள் மீதும் காட்டுயிர் ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com