“கோவிலில் யானை வளர்க்கக் கூடாது” – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

Share

யானை, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

“மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில் யானைகளை வாங்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறபிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். அந்த யானை மீதான உரிமையை மாற்றக் கோரி 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன்., யானை லலிதாவை வளர்க்கும் பொறுப்பு அவரிடமே தொடர வேண்டும் எனவும், தேவைபட்டால் வனத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com