கோவிட்-19 தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் தவணை பூஸ்டர் டோஸையும் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் பற்றி, சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்…
“பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதால் நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு சக்தி இன்னும் அதிகமாகும். தடுப்பூசியின் முக்கியப் பணி உயிர் சேதத்தைத் தவிர்ப்பது. கோவிட் -19 மூன்றாம் அலை சமயத்தில் நோய்ப் பரவல் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் அதிகமாக இல்லை.