காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்குச் செல்ல ரமேஷ், நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பேருந்துக்காக அவர் காத்திருந்தபோது, 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரமேஷ் அருகில் வந்தார். எங்கு செல்ல வேண்டும் என அந்தப் பெண் விசாரித்தார். அதற்கு ரமேஷ், ஊருக்குச் செல்ல காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ரமேஷிடம், சந்தோஷமாக இருக்கலாமா என்று அந்தப் பெண் கேட்டுள்ளார்.
அதைக்கேட்ட ரமேஷின் மனதில் சபலம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணிடம், போலீஸ் பிரச்னை வருமே என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், எனக்கு தெரிந்தவரின் வீடு தாம்பரத்தில் உள்ளது. அங்குச் செல்லாம் என கூறியதோடு ஒரு நாள் இரவுக்கு என ரேட்டும் பேசியுள்ளார். அதற்கு சம்மதித்த ரமேஷ், அந்தப் பெண்ணுடன் தாம்பரம் செல்ல பேருந்தில் ஏறினார். தாம்பரத்தில் பேருந்தை விட்டு கீழே இறங்கிய இருவரும் ஒரு வீட்டின் முன் போய் நின்றிருக்கின்றனர்.
அந்தப் பெண் ஒருவீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்ததும் இருவரும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அங்கு மூன்று பெண்கள் இருந்துள்ளனர். அதைப்பார்த்ததும் ரமேஷ், சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். ஆனால், நான்கு பெண்களும், ரமேஷ் தப்பிச் செல்லவிடாமல் தடுத்ததோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் ரமேஷ் சத்தம் போடாமலிருக்க அவரின் வாயையும் பொத்தியுள்ளனர்.