கோடையில் ஒரு கார் பயணம்: நீண்ட தூரம் செல்ல விருப்பமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

Share

முக்கிய சாராம்சம்

  • 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
  • 2021ஆம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
  • சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.
  • இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.
  • மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை தமிழ்நாட்டில் 14,415 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5,360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
  • 18,560 விபத்து நிகழ்வுகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11,419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கார், வெயில், குடும்பம்

பட மூலாதாரம், Getty Images

மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை வந்துவிட்டது. இந்த நேரத்தில், பலர் தங்கள் குடும்பத்துடன் கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் தொலைதூர பயணங்களைத் திட்டமிடுகிறார்கள்.

கோடை காலத்தில், வாகனங்களின் டயர் வெடிப்பது, இன்ஜின் சூடாவது, வாகனங்களில் திடீரென தீப்பிடிப்பது போன்ற காரணங்களால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் ஆலூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நீரஜா ரெட்டி பயணித்த காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அதனால் பயணத்தைத் தொடங்கும் முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், பயணத்தின் போது விழிப்புடன் இருப்பதன் மூலமும் பெரும்பாலான சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com