கொரோனா: பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா| Is it safe to take booster dose covid vaccine

Share

பி.ஏ 2.75 வகை தடுப்பூசிக்கு கட்டுபடாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு, CDSCO அனுமதி அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அறிவியலுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அரசியலுக்கு தான் மதிப்பு இருக்கிறது” என்றார்.

தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம். “பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள அரசு அறிவுறித்தி இருக்கிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினைக் கட்டாயம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அஷ்வின் கருப்பன்

அஷ்வின் கருப்பன்

இப்போது பல வகையான ஒமிக்ரான் திரிபுகள் பரவுகின்றன. அவற்றை எதிர்கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருந்துள்ளது. எங்களைப் போன்ற மருத்துவர்களின் வட்டத்தில் பலர், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால்தான் பலருக்கு கொரோனா பாதிப்பு குறைவாக ஏற்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சாதாரண சளி, இருமல் மட்டும்தான் ஏற்படும். உயிரிழப்பு அளவுக்குப் போகாமல் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். அதனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. ஃப்ளூ (FLU) வைரஸுக்கான தடுப்பூசியைப் போன்று கொரோனா தடுப்பூசியில் அந்தந்த வகைகளுக்கென தனியாக தடுப்பூசி வரவில்லை. பல நிறுவனங்கள் அந்தந்த வகைகளுக்கென தனியாக தடுப்பூசியைத் தயாரித்து தருவதாகக் கூறியுள்ளன” என்று கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com