இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் மாநில வாரியான நிதி ஒதுக்கீடு:
தற்போது நடந்து முடிந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 215 வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அதில் வழக்கம் போல் ஹரியானா வீரர்களே அதிகபட்சமாக மொத்தம் 34 பேர் பங்கேற்றார்கள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 26 வீரர்களும் தமிழகத்திலிருந்து 17 வீரர்களும் பங்கேற்றனர். மேலும் மகாராஷ்டிராவில் இருந்து 14 பேர், கேரளாவிலிருந்து 13 பேரும் பங்கேற்றுள்ளனர். பதக்கம் வென்றவர்கள் பட்டியல் எடுத்து பார்த்தாலும், அதிலும் 24 பதக்கங்கள் பெற்று முதல் இருப்பது ஹரியானா மாநிலம்தான். அதற்கு அடுத்து பஞ்சாப் 18 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி, ஜார்க்கண்ட் 8 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
2021-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பாக அதிகபட்சமாக 31 பேர் ஹரியானாவிலிருந்து பங்கேற்றனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 19 பேரும் தமிழ்நாட்டிலிருந்து 11 பேரும் பங்கேற்றனர். அதேபோல் ஜூன் மாதம் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் ஹரியானாவில் நடந்து முடிந்தது. அதில் ஹரியானா மாநிலம் 137 பதக்கங்கள் பெற்று அதிக பதக்கங்கள் பெற்ற மாநிலம் என்ற சிறப்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 125 பதக்கங்கள், டெல்லி 79 பதக்கங்கள், கர்நாடகா 67 பதக்கங்கள், கேரளா 55 பதக்கங்கள், தமிழ்நாடு 52 பதக்கங்களைப் பெற்றிருந்தன.