கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்?

Share

கூகுள் நிறுவனத்திற்கு இந்திய அரசு அபராதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியான நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது போன்ற நடைமுறைகளைத் தவிர்த்து சட்டத்தை மதித்து செயல்படும்படி கூகுளுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்பட்டது குறித்தும், குற்றச்சாட்டு குறித்தும் கூகுள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

வியாழக்கிழமையன்று இந்திய போட்டிகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வீடியோ வெளியீடு சேவைகள், இணைய உலாவுதல், இணைய தேடுதல், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்காக ஆன்ட்ராய்டு இயங்கு முறைக்கான லைசென்ஸ் முறையில் கூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com