அதில், பிறக்கும்போது ஒரு குழந்தைக்கு பி.சி.ஜி தடுப்பூசி வழங்கப்படும்போது, காசநோய்க்கு எதிராக 5 வயது வரை குறிப்பிடத்தக்க பாதுகாப்பை அந்தத் தடுப்பூசி வழங்குகிறது. ஆனால் குழந்தைகளுக்கு வயதாகும்போது தடுப்பூசியின் நோய்க்கு எதிராகச் செயல்படும் திறன் குறையத் தொடங்குகிறது.
இதுவே இளம் பருவத்தினருக்கும், பெரியவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியினால் எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பி.சி.ஜி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
ஒருவேளை குழந்தைகளுக்கு பி.சி.ஜி பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டாலும் அவையும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு காசநோய்க்கு எதிராகச் செயல்படும் திறனை இழக்கலாம். எனவே காசநோய்க்கு எதிராக புதிய தடுப்பூசிகளின் தேவை உள்ளது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக சுமார் 17 நாடுகளில் இருந்து 1998 ஆம் ஆண்டு முதல், 2018 வரை காசநோயால் பாதிக்கப்பட்ட 70,000 நபர்களது பி.சி.ஜி தடுப்பூசியின் தாக்கம் குறித்த தரவுகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.