நாகர்கோவில்: ராகுல் நடைபயணம் வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியாஅனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘நான் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன், அதனால் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை, ராகுல்காந்தியின் இந்த பயணத்திற்கு பிறகு காங்கிரஸ் மிகப்பெரிய புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நடைபயணத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் பார்க்கிறேன். நான் இந்த நிகழ்வில் உங்களுடன் பங்கேற்பது போன்றே உணர்கிறேன். ஒற்றுமையாக நாம் முன்னேறி செல்வோம்’ என்று கூறியுள்ளார்.