ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர், இயக்குநராக 53 படங்களை எடுத்துள்ளார். பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை தன் படங்களின் மூலமாகப் பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் இயக்கத்தில் ‘சங்கராபரணம்’, ‘ஸ்வாதிமுத்யம்’, ‘சாகரசங்கமம்’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
மாற்றுச் சினிமாவின் முன்னோடியாகத் திகழ்ந்தவர், தமிழில் ‘குருதிப்புனல்’, ‘முகவரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மாபெரும் கலைஞர் கே.விஸ்வநாத்துக்கு புகழ் அஞ்சலி!