கம்பம் ஊருக்குள் இறங்கிய அரிக்கொம்பன்: பிடிக்க வரும் கும்கி யானைகள் – என்ன நடக்கிறது?

Share

அரிக்கொம்பன்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு,

ஊருக்குள் வந்த அரிக்கொம்பன்

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை அரிக்கொம்பனை பிடிக்க கும்கி யானைகள் ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.

யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் தொந்தரவு

கேரளாவில் 35 வயதான அரிக்கொம்பன் எனும் ஆண் யானை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.

இதையடுத்து, இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com