பின்னர், நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி, அந்த கும்பல் இருவரையும் மிரட்டி அனுப்பியிருக்கிறது. அதற்கு பயந்து காதலர்கள் இருவரும் இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு தகவல் சென்றிருக்கிறது. அதையடுத்து, உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அதில், மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த ஊக்கு என்ற சிவக்குமார், மணிகண்டன், விமல், மரம் என்ற தென்னரசு ஆகியோர் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் அனைவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.