கத்தார் 2022 போர்ச்சுகல்: ரொனால்டோவை மிரளவைத்த உலகக் கோப்பையின் ‘கடைசி அணி’

Share

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிரட்டிப் பார்த்திருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் அணிகளின் தர வரிசையில் கடைசியாக இருக்கும் கானா.

எதிர்பாராத வகையில் பதில் கோல்களை அடித்த கானா அணி, கடைசி நிமிடத்தில்கூட போட்டியைச் சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. 

கடைசி நிமிடத்தில் போர்சுகல் கோல்கீப்பர் பந்தைப் பிடித்து கோலுக்கு அருகே அடிக்க முயன்றபோது பின்னால் இருந்த கானா வீரர் பந்தைக் காலால் பறித்து கோலை நோக்கித் தட்டிவிட்டார். ஒரு கணம் போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் உறைந்து போயிருந்தனர். அந்த நேரத்தில் களத்துக்கு வெளியே இருந்த ரொனால்டோ அதிர்ச்சியில் தலையிலேயே கைவைத்துவிட்டார். 

இருப்பினும் கோல்கீப்பரைக் கடந்து கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பந்தை ஒன்றிரண்டு அடிக்கு முன்பாக போர்ச்சுகல் வீரர் தடுத்துவிட்டார். அது கோலாக மாறியிருந்தால், அது கத்தார் உலகக் கோப்பை போட்டியில் மற்றொரு அதிர்ச்சியான முடிவாக அமைந்திருக்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com