கணவரைக் கொன்ற மனைவி – பாம்பின் மீது பழி போட முயற்சி

Share

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

பட மூலாதாரம், SHAHBAZANWAR

படக்குறிப்பு, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமித் காஷ்யப் என்ற நபரின் மரணம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் அந்த நபர் பாம்பு கடித்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அப்போது இந்த மரண சம்பவத்தில் ஒரு புதிய திருப்பம் வந்தது.

இந்த சம்பவத்தில் அமித்தின் மனைவி ரவிதா(25) மற்றும் அவரது காதலர் என்று கூறப்படும் அமர்தீப்(20) ஆகியோர் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

அமித் காஷ்யப் – ரவிதா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com