கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்துக்கு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்த சந்தை நிலவரப்படி எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 187.1 பில்லியன் டாலராக ஆக உயர்ந்தது.
தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100% அதிகரித்துள்ளது. இதனால் அர்னால்ட்டின் 185.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டினார். அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததால் உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் எலான் மஸ்க்.