‘‘இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். டி20 அணியில் இனி ரோஹித் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக ஆவார்!” என்று தெரிவித்துள்ளார்.
“ஜஸ்பிரித் பும்ராவால் தன் முதுகை வளைக்கக்கூட முடியவில்லை. அவரைப் போன்றே காயமடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். முழுமையான உடற்தகுதியை எட்டாத வீரர்கள் இப்படியாக ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்டு 80% உடற்தகுதியோடு கூட ஆடியிருக்கின்றனர்” என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், இருவரும் பல முறை தனது வீட்டிற்கு வந்து சென்றிருப்பதாகவும் சேத்தன் சர்மா தெரிவித்திருக்கிறார்.