‘ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ – சிதைக்கப்பட்ட சுவர் ஓவியங்களை இவர்கள் எப்படி அணுகினார்கள்?

Share

ஆஷி குஷ்வாஹா
படக்குறிப்பு, ஆஷி இந்த வீடியோவை வெளியிட்ட பின்னரே, குவாலியர் சுவர்களில் உள்ள பெண்களின் ஓவியங்கள் சிதைக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

“நான் தற்போது பள்ளியில் படித்து வருகிறேன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் கல்லூரிக்குச் செல்வேன். எனக்காக நீங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்? ஓவியங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பிறகு நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? இந்தச் சமூகத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா?”

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் வசிக்கும் 17 வயது ஆஷி குஷ்வாஹாவைச் சந்தித்தபோது இந்த கேள்வியை நாங்கள் எதிர்கொண்டோம்.

2026 ஜனவரி 1 ஆம் தேதி காலை, குவாலியரின் ரிவர் கேட் அருகே கட்டப்பட்ட சுவரின் வீடியோவை ஆஷி சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

இந்தச் சுவரில் யோகா பயிற்சி செய்யும் பெண்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஓவியங்களின் அந்தரங்க உறுப்புகள் கீறப்பட்டுச் சிதைக்கப்பட்டிருந்தன.

வீடியோவைப் பதிவிட்ட பிறகுதான், இது வெறும் படங்களைச் சிதைப்பது மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் மீதும் நடத்தப்பட்ட ஒரு மோசமான கேலி விளையாட்டு என்பதை உணர்ந்ததாக ஆஷி கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com