அதோடு செயின்ட் வின்சென்ட் அறக்கட்டளை மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவக் குடியிருப்பாளர்களுக்கு மருத்துவம் குறித்து கற்பித்து வருகிறார். ஊரடங்கு நேரத்திலும் இதனை நிறுத்தாமல், ஜூம் வழியாகக் கற்பித்துக் கொண்டு இருந்தார். இவருக்கு மருத்துவத்தைத் தாண்டி வயலின் வாசிப்பதிலும் ஆர்வம் அதிகம்.
கின்னஸ் உலக சாதனையைப் பெற்ற பிறகு டக்கர் தெரிவிக்கையில், “ஓய்வு பெறுவது நீண்ட ஆயுளுக்கு எதிரி என்று நான் நம்புகிறேன். எனது இளமைப் பருவத்தில்கூட நான் ஓய்வு பெறுவதைப் பற்றி ஒருமுறை கூட நினைத்ததில்லை. நீங்கள் செய்வதை விரும்பி, அதைச் செய்யும் திறன் உடையவராக இருக்கும்போது, ஏன் ஓய்வு பெற விரும்புகிறீர்கள்? ஓய்வு பெறுவதற்கான எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை.
இந்த கின்னஸ் உலக சாதனை பட்டத்தை நான் ஒரு தனி மரியாதையாகக் கருதுகிறேன்; மேலும் இதை வாழ்க்கையில் ஒரு நீண்ட திருப்திகரமான மற்றும் மகிழ்ச்சியான மற்றொரு சாதனையாகக் கருதுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.