ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், தங்களின் ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு காலை நிற்கும் காலுக்கு பின்னால் நீட்டி, கைகளை சேர்த்தபடி, கண்களை நேராக நோக்கி 10 விநாடிகள் வரை நிற்க வேண்டும். இரண்டு கால்களிலும் மூன்று முயற்சிகள் வரை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஆனால், இச்சோதனையில்ந்ல் ஒருவரால் நிற்க முடியாமல் போனது. `ஒற்றைக் காலில் நிற்க முடிந்தவர்களை ஒப்பிடுகையில், நிற்க முடியாதவர்கள் அடுத்த 10 வருடங்களில் இறப்பை விரைவில் எதிர்கொள்வதற்கான ஆபத்து 84 சதவிகிதம் அதிகம் உள்ளது. அதேபோல் இறப்புக்கான காரணமானது வயது, பாலினம், பி.எம்.ஐ, உடல்நலக் குறைபாடுகள், கரோனரி தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற காரணங்களை பொறுத்தது என்றும் கருதப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
`முதியவர்கள் ஒற்றைக் காலில் நிற்பது பல காரணங்களுக்காக முக்கியமாகக் கருதப்படுகிறது. காரில் இருந்து இறங்க, படிக்கட்டில் இருந்து ஏறி இறங்க எனத் தொடர்ந்து நாம் ஒற்றைக் காலில் நிற்பதற்கான நிலை தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இது ஃபிட்னஸையும், ஆரோக்கியத்தையும் எதிரொலிப்பதாக உள்ளது’ என இந்த ஆய்வின் ஆசிரியரான டாக்டர் கிளாடியோ கில் அரோஜோ கூறியுள்ளார்.
ஒற்றைக் காலில் நிற்பதை வயதானவர்களுக்கான ஆரோக்கிய பரிசோதனைகளில் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், 10 நொடிகள் ஒற்றைக் காலில் நிற்க இயலாமல் சமநிலை தவறுபவர்கள், உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை எனத் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள், ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள்.