கடந்த 110 வருடமாக செயல்பட்டுவந்த ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்தாகி, மூடப்பட்டுள்ளது. இதனால் இதில் முதலீடு செய்திருந்தவர்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது!
கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி புனேவில் இருக்கும் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இது இன்று (22.09.22) முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி அந்த வங்கி அதிகாரப்பூர்வமாக செயல்பட முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
இந்த வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லாததாலும், லாபம் சம்பாதிக்க வழிவகை இல்லாததாலும், 1949 வங்கி விதிமுறைகளின்படி செயல்படாததாலும், இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.