விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்
அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “பண மோசடி வழக்கில் தன்னை திமுக அரசு கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள்.
நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். என்னைச் சிறைக்குள் தனிமைச் சிறையில், இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்துப் பணிய வைக்க நினைத்தார்கள்.
ஆனால் நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன் ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனத் தெரிவித்துவிட்டேன்.