இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா செவ்வாய்க்கிழமை வெளியான ஐசிசி மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்து தனது சிறந்த ஆட்டத்திற்காக வெகுமதியை பெற்றுள்ளார்.
தீப்தி ஷர்மா தற்சமயம் நடைபெற்று வரும் தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தற்போது முதல் இடத்தில் இருக்கும் ஒருநாள் பந்துவீச்சாளரான இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோனை நெருங்கியுள்ளார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் நிகழ்ந்து வரும் ஒயிட்-பால் தொடரிலும் தனது ஃபார்மை தொடர்கிறார்.