அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கியிருந்தது. உடனடியாக கார்த்திக் சர்மா என்கிற வீரரையும் போட்டி போட்டு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. யார் இந்த கார்த்திக் சர்மா?
ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கு 19 வயதே ஆகிறது. அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர் ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் உத்ரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.