எரிஸ் வைரஸ் பரவலால் தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற பொதுவான அறிகுறிகள்தான் தென்படுகின்றன. இங்கிலாந்தில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் புதிய வைரஸ் மேலும் பரவாமல் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
“இந்த வாரம் அறிக்கையில், கோவிட் – 19 எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். வயதானவர்களிடம் தான் பெரும்பாலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த விகிதங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என UKHSA -ன் நோய்த்தடுப்புத் தலைவர் டாக்டர் மேரி ராம்சே கூறியுள்ளார்.