’10 நிமிடங்கள் தாமதம்’ – ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்டதால் உயிர் தப்பிய பெண்
குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த பூமி செளகான், நேற்று விபத்துக்குள்ளான AI-171 விமானத்தைத் தவறவிட்டார், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர், பணியாளர்கள் உட்பட, உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி செளகான் அதைத் தவறவிட்டுவிட்டார். அதனால் அவர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.
அதுகுறித்துப் பேசிய பூமி செளகான்,”நேற்று நான் லண்டனுக்கு செல்ல விமான நிலையம் சென்று கொண்டிருந்தேன். என்னுடைய விமானத்தின் நேரம் மதியம் 1.10. நான் செல்லும்போது 12.20 ஆகிவிட்டது. ஏர் இண்டியா 12.10க்கு செக்-இன்னை நிறுத்திவிட்டார்கள். செக்-இன் கேட்டில் இருந்தவர்களிடம் சென்று, 10 நிமிடங்கள் தானே தாமதமாகியிருக்கிறது, இமிக்ரேஷன் செயல்முறைகளைத் துரிதமாகச் செய்துவிடுகிறேன் என்று அவர்களிடம் கேட்டேன்.
பணியாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமும் என்னை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் மூவருமே என்னை அனுமதிக்கவில்லை. உங்களுக்கு பத்து நிமிட தாமதமாக இருக்கலாம், இப்போது உங்களை அனுமதித்தால், விமானம் கிளம்ப மேலும் 15 நிமிடம் தாமதமாகும் என்று அவர்கள் கூறினார்கள். எனவே நான் திரும்பி வர வேண்டியிருந்தது” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு