இதுகுறித்து, தன்னாட்சி அமைப்பின் இணைச் செயலரும், வழக்கறிஞருமான சிவகுமரன் கூறுகையில், “2010-ல் நகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில், ஏரியா சபை, வார்டு கமிட்டி கொண்டுவரப்பட்டது. இதை கொண்டுவந்த பிறகும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசு வந்த பின்னர் அரசாணை பிறப்பித்து ஏரியா சபை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாணை 92ன் படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
3 மாதத்திற்கு ஒருமுறை இக்கூட்டத்தைக் கூட்டாமல் தேவைப்படும் போதெல்லாம் இக்கூட்டத்தைக் கூட்டும் வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்கும் வகையில் ஏரியா சபைக் கூட்டம் இருக்க வேண்டும். மக்கள் மனு கொடுக்கும் ஏரியா சபையாக இல்லாமல், மக்களே அதிகாரம் படைத்தவர்களாகவும், தேவையான திட்டத்தை தாங்களே தேர்வு செய்யும் வகையிலும் விதிகளில் அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும்” என்றார்.