எல்ஐசி பங்குகளை வாங்குவது லாபமா, நஷ்டமா? முக்கியமான தகவல்கள்

Share

  • ஆலோக் ஜோஷி
  • மூத்த பொருளாதார பத்திரிகையாளர்

एलआईसी

பட மூலாதாரம், LIC INDIA/BBC

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி யின் தொடக்கப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்று மே 4ஆம் தேதி காலை வெளியானது. மே 9ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.

எல்.ஐ.சி பாலிசி எடுக்காத அதாவது காப்பீடு பெறாத குடும்பங்கள் நம் நாட்டில் இருக்கும் வாய்ப்பு குறைவு. எல்ஐசியின் ஐபிஓ இப்போது வரப்போகிறது. இது என்ன பெரிய விஷயம் என்ற கேள்வி இப்போது எழுகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகவும், உலகின் ஐந்தாவது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகவும் உள்ளது.

கூடவே இது நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒன்றாகும். அதாவது, நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மிகவும் மதிப்புமிக்க சொத்தின் பெரும்பகுதி இந்த நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவின் பங்குச் சந்தைகளில் பணத்தை முதலீடு செய்யும் மிகப்பெரிய நிறுவனம் எல்ஐசி ஆகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com