வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
என் அழகானவன்;
என்னோடு பழகியவன்;
வாட்டம் போக்குபவன்;
பளபளப்பானவன்;
இளஞ்சிவப்பு நிறத்தழகன்;
என் உடலுக்கு கேடயமானவன்;கொழுப்பைக் குறைக்க உதவுபவன்
நான் அழுதால் தானழுது
நான் சிரித்தால் தான் சிரித்து
எனக்கு எனக்கான
ஒரே உயிரானவன்.
என் ஜீவனை புதுப்பிக்கிற சக்தி அவனுக்கு மட்டுமே உண்டு.
என் கொஞ்ச லுக்காக காத்திருப்பவன்.
தினமும் என்னுடைய காலை /மாலை பொழுதுகளை அழகாக்குபவன்.
மனிதத் தனத்தை மறந்து இயந்திரத்தனமாகிவிட்ட மனசுக்கு அவனோடு பேசும் பொழுதுகளில் தான் நிம்மதியே கிடைக்கிறது.
சாம்பாருக்கு நீள நீளமாய்…
வத்த குழம்பு க்கு முழுதாய் உரித்து குண்டு குண்டாய்..
பனீர் டிக்காவுக்கு சதுரசதுரமாய்..
குருமாவுக்கு பொடியாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாமல் நடுத்தரமாய்…
ஆம்லெட்டுக்கு மிகவும்பொடியாய்… பச்சடிக்கு மிகவும் மெல்லிசாக நீள நீளமாய்… அதுவே இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பச்சடிக்கு குறுக்கும் நெடுக்குமாக வெட்டியதாய்…
கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள மேல் தோலை மட்டும் உரித்து…
வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயத்தை மட்டும் கழுவித் தோலை உரிக்காமல் வில்லைகளாக நறுக்கி மாவில் தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க வெங்காய பஜ்ஜி அழகாய் கண்ணடிக்கும்.