கோவிட் தொற்றில் தீவிரமாகப் பணியாற்றியவரும், இந்திய மருத்துவ சங்க கேரள ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவருமான மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் இந்தப் பாடப்புத்தக அத்தியாயத்தின் ஆசிரியர்.
எதிர்கால கோவிட் பற்றி புத்தகத்தில் கூறப்பட்ட தகவல்கள்:
*இதன்பின் வைரஸ் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோய் தொற்றுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும் அல்லது லேசாக உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்.
*மாறுபட்ட உயிரியல் பண்புகளுடன் புதிய வேரியன்ட்கள் வரலாம். இவற்றை நிராகரிக்க முடியாது. ஏனெனில் பல வைரஸ்களை போல அல்லாமல், SARS COV 2 பல உறுப்பு அமைப்புகளைச் சேதப்படுத்தும் திறன் கொண்டது.
* இதயம், ரத்த நாளங்கள், மூளை, நோயெதிர்ப்பு சக்தி, நுரையீரல் உள்ளிட்ட அமைப்புகளைச் சேதப்படுத்தும் திறன் கொண்டது. அதுவும் இது நோய்க்கிருமியாக மாறும் பட்சத்தில் கடுமையான விளைவுகளைத் தூண்டலாம்.
*நிபுணர்களின் கணிப்புகளைத் தாண்டி, ஒரு தொற்றுநோய் செயல்படுகிறதெனில், அதற்குப் பல காரணங்கள் இருக்கும். இது மற்றொரு சுழற்சி வைரஸ் தொற்று.
*இப்போது, கோவிட் பற்றி யாரும் படிக்கவோ பேசவோ விரும்புவதில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், கோவிட் ஒருபோதும் கடந்தகால அறிவியலாக இருக்காது. கோவிட் பல புதிய விஷயங்களை மருத்துவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.
*இன்றும் லாங் கோவிட் பாதிப்பு என்பது நோயாளிகளுக்கு பெரிய கவலையாக உள்ளது. எனவே, வருங்கால மருத்துவர்கள் கோவிட் தொற்றைப் புரிந்துகொள்வது முக்கியம். எனவே இந்தப் புத்தகம் மருத்துவ மாணவர்களுக்குப் பரவலாக விநியோகிக்கப்படும்.