எனவே, எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, இவரது ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஷி ஜெங்லி எச்சரிக்கையில், “முன்பு ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றினால், அது எதிர்காலத்திலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார உள்கட்டமைப்புகள் உலகளாவிய நிலையில் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த ஆய்வு குறித்த முடிவுகள், ஆங்கில பத்திரிக்கையான எமர்ஜிங் மைக்ரோப்ஸ் அண்ட் இன்ஃபெக்ஷன்ஸ் இதழின் 2023 ஜூன் மாத பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் மீண்டிருக்கும் நிலையில், இந்த ஆய்வு குறித்தான எச்சரிக்கை கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.