சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `Health 360′ என்ற நிகழ்ச்சி, பிப்ரவரி-14-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவரும் ஆயிரம்விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஜி.ஆர்.டி ஹோட்டலின் சி.இ.ஓ விக்ரம், லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளுயென்ஸர் (lifetime influencer) சுபிக்ஷா வெங்கட், உடற்பயிற்சி ஆலோசகர் மல்லிகா ஃபெர்னாண்டஸ், லைஃப் கோச் மாலிகா கே.எஸ்.ஆர் ஆகியோர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மருத்துவர் எழிலன் நாகநாதன் பேசுகையில், “மரபணுக்களைப் பாதுகாப்பது மற்றும் அடுத்த தலைமுறைக்குப் பரிமாற்றுவது தான் மனிதன், விலங்கு, பறவை, நுண்ணுயிர்கள் என அனைத்து உயிர்களின் அடிப்படை. ஆரோக்கியம் என்பதுதான் நம் வாழ்வின் நிரந்தர முதலீடு. நம் உடலையும் மனதையும் சீராக வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் நோய்களில் இருந்து பாதுகாக்கும். முதல்வர் ஸ்டாலின் தன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். அதை அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.