மேலும், இதன் மூலம் ஆண்டுதோறும் 13,000 டன்கள் வரை கோழி மற்றும் மாட்டிறைச்சியை வளர்க்க முடியும் என குட் மீட் (Good Meat) தெரிவித்துள்ளது. முட்டைகள் அல்லது செல் வங்கிகளில் இருந்து பெறப்படும் செல்கள் மூலம் இறைச்சி வளர்க்கப்படுவதால் எந்த உயிரினமும் இறைச்சிக்காகக் கொல்லப்பட வேண்டிய தேவை இருக்காது.
உலகெங்கிலும் உள்ள சுமார் 170 நிறுவனங்கள் இந்த செயற்கை இறைச்சி வளர்ப்பு வேலையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், குட் மீட் நிறுவனம் மட்டுமே அதன் தயாரிப்புகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றுள்ளது. டிசம்பர் 2020-ம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கோழியை சிங்கப்பூருக்கு வழங்கத் தொடங்கியது.