இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?

Share

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?

பட மூலாதாரம், Getty Images

சிரியாவில் பல்வேறு மதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. புதிய அரசாங்கம் பிளவுபட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த முயலும் வேளையில், இன்னமும் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை, ட்ரூஸ் சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு வணிகர் கடத்தப்பட்ட செய்தி, தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகள், சுன்னி பெடோயின் போராளிகள் இடையே மோதல் ஏற்பட வித்திட்டது.

பின்னர் ஜூலை 15ஆம் தேதி, ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்கவும் சுவெய்தாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு ஆதரவுப் படைகளை அழிக்கவும் தனது படைகள் முயல்வதாகக் கூறி இஸ்ரேல் இதில் ராணுவ ரீதியாகத் தலையிட்டது. சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (SOHR) கூற்றுப்படி சுவெய்தாவில் ஞாயிறு முதல் குறைந்தது 350 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல டஜன் பேர் உயிர்களைப் பறித்த ட்ரூஸ் போராளிகள் மற்றும் சிரியாவின் புதிய பாதுகாப்பு படையினர் இடையே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த வன்முறைக்குப் பிறகு நிகழ்ந்த முதல் வன்முறை இது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com