இளையராஜா, ஏஆர் ரஹ்மான், ஹாரிஸ் இசையில் ஹிட் பாடல்கள் உருவானது எப்படி? கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

Share

கௌதம் மேனன் பேட்டி

பட மூலாதாரம், Gautham Vasudev Menon

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்த் திரையுலகில் வலுவான காதல் கதைகளைச் சொல்வதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தனி இடமுண்டு.

2001-ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் திரைத்துறையில் 25-வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இயக்கம், நடிப்பு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனது பட கதாநாயகிகள் எனப் பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

பாடலுக்கு முக்கியத்துவம்

கேள்வி: உங்கள் படங்களில் பாடலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பல ஆல்பங்கள் ஹிட் ஆகின்றன. அதற்கு காரணம் என்ன?

பதில்: ”எனக்குப் பாடல்கள் மீது காதல் அதிகம். அதற்கு காரணம் அம்மா, அப்பா மற்றும் சிறு வயதில் ரசித்த பாடல்கள். 1960-70களில் வந்த பாடல்கள் அம்மாவுக்கு அத்துப்படி. அந்தப் பாடல்கள் குறித்து என்னிடம் பேசுவார். பாடல்கள் மீதான ரசனை எனக்கும் தொற்றிக்கொண்டது. நாயகன் படம் பார்த்துவிட்டு இன்ஜினியரிங் வேண்டாம், சினிமா பக்கம் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

நான் கதை எழுதும்போது பேப்பர்வொர்க்கில் கூட பாடல்கள் வரும் இடத்தை உடனே கடந்து போகமாட்டேன். எந்த மாதிரியான பாடல் வர வேண்டும், யார் பாட வேண்டும், எப்படி படமாக்கப்பட வேண்டும் என நிறைய யோசிப்பேன். என் குழுவுடன் தீவிர விவாதம் நடத்துவேன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com