இலங்கை ‘மாவீரர் நாள்’ நிகழ்வில் கூடிய பல்லாயிரம் பேர்

Share

நினைவேந்தல்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர்.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளிக் குழுக்கள் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் என்ற தனி நாடாக்கவேண்டும் என்று போராடினர்.

பல கட்டங்களை கடந்த இந்தப் போராட்டம், இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையை எட்டியது. 2008-09 காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் பலத்த பின்னடைவுகளை சந்தித்தது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுருங்கிக் கொண்டே வந்தன. இறுதியில் அவர்கள், முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள நந்திக் கடல் பகுதிக்குள் சுருக்கப்பட்டனர்.

அந்த ஆண்டு மே மாதம் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் ஏற்பட்ட கடும் போரில் புலிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டனர். இந்தப் போரில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பல்லாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com