இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?

Share

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்

இலங்கை பொருளாதார நெருக்கடி

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர்.

அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும் இந்தியாவை விட மிக, மிகக் குறைவு.

இருந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பு ‘இலங்கையில் நடந்தது, தற்போது இந்தியாவில் நடக்கிறது,’ எனக் கூறும் சில பதிவுகளை சமூக வலைதளங்களில் இப்போது பார்க்க முடிகிறது. அப்படியானால் இந்தியாவும் இலங்கையைப்போல ஆகிக்கொண்டிருக்கிறதா?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஹலால் புறக்கணிப்பு, முஸ்லிம் கடைகள் மற்றும் மசூதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய, இலங்கையின் டேட்லைனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் பகிரப்படுகின்றன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com