இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் – காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள்

Share

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து கோடி கணக்கான ரூபாயை பொதுமக்கள் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்பு போலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்டை போலிஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிக்கைக்கு சென்ற அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.

பொதுமக்களால் இந்த பணம் எடுக்கப்பட்டு இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் ஊடக பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி அறிவுறுத்தப்பட்ட நிலையில் கோட்டை போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் அங்கு சென்று அந்த பணத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாளை நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படுத்தப்பட இருக்கின்றன. சுமார் ஒரு கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில் இரண்டு மாத காலமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com