இலங்கை சென்ற இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

Share

இலங்கை, திட்வா புயல், இந்தியா உதவி, சாகர் பந்து, ஜெய்சங்கர்

பட மூலாதாரம், CWC MEDIA

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயலினால் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகளில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக இந்தியா ஆரம்பம் முதலே பாரிய உதவிகளைச் செய்து வருகின்றது.

இலங்கையில் புயலின் தாக்கம் குறைவதற்கு முன்னதாகவே பல்வேறு நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அயலவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக இந்தியாவின் உதவிகள் இலங்கையை மீண்டெழுவதற்குக் கரம் கொடுத்து வருகின்றன.

நிவாரண உதவிகள், மீட்புக் குழுவின் உதவிகள், இந்திய ராணுவத்தின் உதவிகள், சாலை புனரமைப்பு மற்றும் பாலங்களின் நிர்மாணத்திற்கான உதவிகள் எனப் பலவற்றில் இந்தியா உதவி செய்துள்ளது.

இந்த நிலையில், புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 22ஆம் தேதி கொழும்பு வந்தடைந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com